Islamic Widget

August 26, 2010

அகரம் கொள்ளுமேட்டில் ஏழைகளுக்கு அன்னதானம்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே ஒன்றிய தி.மு.க., சார்பில் அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் கொள்ளுமேடு பகுதியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் தி.மு.க., கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செழியன், கிளை செயலாளர் சரவணன் முன் னிலை வகித்தனர். சேர் மன் முத்துபெருமாள் தி.மு.க., கொடியேற்றி ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் வக்கீல் தங்கவேல், இளைஞரணி அமைப்பாளர் முனவர் உசேன், சண்முகம், வேலவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment