August 26, 2010
பரங்கிப்பேட்டை பகுதியில் சுனாமி பாதித்த மாணவர்களுக்கு செயல்முறை விளக்க நிகழ்ச்சி
பரங்கிப்பேட்டை பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு செயல் முறை விளக்க நிகழ்ச்சி நடந்தது. பரங்கிப்பேட்டை பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மாணவ,மாணவிகள் பரங்கிப் பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த கரிக்குப்பம், கே.பஞ்சங்குப்பம் ஆகிய பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடந்தது. ஐ.எப்.ஏ.டி., நிறுவன உதவியுடன் கடலூர் தீயணைப்புத் துறையினர் பேரிடர் தடுப்பு செய்முறை விளக்கங்களை செய்து காட்டினர். பின்னர் கடலூர் சில்வர் பீச்சில் சுனாமி போன்ற பேரிடர்களை தடுக்கவும், கரை அரிப்புகளை தடுப்பதற்கும் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர்களை நேரில் அழைத்துச் சென்று காண்பித்தனர். தொடர்ந்து கடலூர் முதுநகரில் ஐஸ் உற்பத்தி தொழிச்சாலை, கடலூர் அருங்காட்சியகம், பாலூர் விதைப் பண்ணைக்கு அழைத்துச் சென்று விளக்கினர். நிகழ்ச்சியில் நிலைய அதிகாரி மதிவாணன், தலைமை ஆசிரியர் ரவி, கலிரோஜா, மற்றும் ஜெபாரத், சாமிநாதன், ரங்கநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- 8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு!
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இறப்புச் செய்தி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு
No comments:
Post a Comment