Islamic Widget

August 31, 2010

4 தொகுதியில் போட்டியிட மனு ஜெயலலிதா மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதா கடந்த 2001- ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கடலூர் மாவட்டம் புவனகிரி உள்பட 4 தொகுதிகளில் போட்டியிட மனு செய்தார்.




இது தொடர்பாக ஜெயலலிதா மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா தடை உத்தரவு பெற்றததால் இதுவரை 28 முறை தள்ளிவைக்கப்பட்டது.



நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு இளங்கோவன் வருகிற டிசம்பர் 1-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment