கடலூர்:கடலூர் அருகே, பள்ளி மாணவியர் விபத்தில் இறந்த சம்பவம் தொடர்பாக, நாகார்ஜுனா நிறுவன அதிகாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.
கடலூர் அடுத்த செம்மங்குப்பத்தில், நேற்று முன்தினம், பள்ளி மாணவியர் சென்ற வேன் மீது பெரியக்குப்பம் நாகார்ஜுனா கம்பெனி ஊழியர்கள் சென்ற ஆம்னி பஸ் மோதியது.இந்த விபத்தில், வேனில் பயணம் செ#த கடலூர் செயின்ட் அன்னீஸ் (புனித அன்னாள்) மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர் திருச்சோபுரம் அபிராமி (15) அகிலாண்டேஸ்வரி (12) பெரியகுப்பம் பவித்ரா (14) திவ்யா (15) ஆகியோர் இறந்தனர்; பலர் காயமடைந்தனர். அவர்களை, நாகார்ஜுனா கம்பெனி அதிகாரிகள் சந்தித்து ஆறுதல் கூறவில்லை.இதனால் ஆத்திரமடைந்த பெரியக்குப்பம் மற்றும் சற்று வட்டாரத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 9 மணிக்கு திருச்சோபுரம் ஊராட்சி அலுவலகம் எதிரில் திரண்டு, அந்த வழியாக நாகார்ஜுனா நிறுவனத்துக்கு சென்ற மூன்று சுமோவை தடுத்தி நிறுத்தி அதில் பயணம் செய்த 10 அதிகாரிகளை சிறைபிடித்தனர். பணிக்கு சென்ற நாகார்ஜுனா ஊழியர்களையும் தடுத்து நிறுத்தினர்.கடலூர் டி.எஸ்.பி., பாண்டியன் மற்றும் போலீசார் கிராம மக்களை சமாதானம் செ#து அதிகாரிகளை விடுவித்தனர். ஆனால் வாகனங்களை விட மறுத்துவிட்டனர்.இந்நிலையில், திருச்சோபுரத்தைச் சேர்ந்த 40 பேர், பெரியகுப்பம் நாகார்ஜுனா நிறுவனம் முன் திரண்டு கற்களை வீசினர். அதில், ஆம்புலன்ஸ் முன்பக்க கண்ணாடியும், பாதுகாவலர்கள் அறை கண்ணாடியும் உடைந்தன.கல்வீச்சில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். கம்பெனி நுழைவாயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
Source:dinamalar
December 22, 2010
சாலை விபத்தில் மாணவியர் இறந்த சம்பவம்தனியார் நிறுவன அதிகாரிகள் சிறைபிடிப்பு
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- நஷ்டவாளர்கள் யார்?
- மல்லிகைப் பூ ஒரு முழம் 50 ரூபாய்!
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- சென்னையில் கடும் பனி மூட்டம்: விமானங்கள், ரயில் சேவை பாதிப்பு!
- ஓட்டுனர் உரிமம் பெற இருப்பிட சான்றுக்கு குடும்ப அட்டையை ஏற்றுக்கொள்ள கோரிக்கை
- இறைத்தூதரை அவமதிக்கும் செயல்:மரணத்தண்டனை வழங்கும் மசோதாவுக்கு குவைத்தில் அங்கீகாரம்!
- நியாயவிலைக் கடைகளில் வெங்காயம்?
- மய்யத் செய்தி
- பரங்கிப்பேட்டை பைத்துல் மால் கமிட்டியின் பிரசுரம்
No comments:
Post a Comment