
புயல் கரையைக் கடக்கும்போது காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் கடற்கரை பகுதிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. புயலின் சீற்றம் காராணமாக புதுவை கடலோரப்பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சின்ன முதலியார்சாவடி, கோட்டக்குப்பம், பொம்மையார் பாளையம், குயிலாப்பாளையம், கோட்டக்குப்பம் ஆகிய பகுதிகளில் கடும் கடல் கொந்தளிப்பு உள்ளது. இதனால் இன்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
மேலும், கடல் சீற்றம் காரணமாக சின்னமுதலியார் சாவடியில் கடல் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கடற்கரையோர தென்னை மரங்கள் வேரோடு கீழே சாய்ந்து விழுந்தன. ராட்சத அலைகள் மேலெழும்பி கடற்கரையை முட்டி மோதுகின்றன. எனவே, மீனவர்கள் தங்களது படகுகளைப் பாதுகாப்பான இடத்துக்கு இழுத்து சென்று வைத்துள்ளனர்.
கடலூர் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் கடலூர் துறைமுகத்தில் 3-வது எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Source: inneram
No comments:
Post a Comment