Islamic Widget

October 26, 2012

விருத்தாசலம் அருகே ஆற்றில் வெள்ளம்: பாலம் உடைந்ததால் 25 கிராமங்கள் துண்டிப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சமீப நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் வெள்ளாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தால் விருத்தாசலத்தை அடுத்த முருகன்குடியில் இருந்த தரைப்பாலம் உடைந்தது. சிறிது நேரத்தில் அந்த பாலம் துண்டு, துண்டாக ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டது. எனவே அந்த பகுதியில் உள்ள கிளிமங்களம், பெலாந்துறை, பாசிக்குளம், புத்தூர், ஓலையூர் உள்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் போக்குவரத்து வசதியின்றி துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த பகுதி பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் செல்ல முடியாமல் அவதியடைந்துள்ளனர். வெள்ளாற்றில் வெள்ளம் வடிந்த பிறகு அந்த பகுதியில் போக்குவரத்துக்கான சீரமைப்பு பணிகள் தொடங்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment