Islamic Widget

December 01, 2011

இன்று கடையடைப்பு, உண்ணாவிரதம்: வணிகர் சங்கப் பேரவை அறிவிப்பு



தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் த.வெள்ளையன் வேண்டுகோளுக்கு இணங்க, மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கடலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை தேதி கடையடைப்பும், உண்ணாவிரதமும் நடைபெறும் என்று வணிகர் சங்கப் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.பக்கிரிசாமி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
 இது குறித்த அவரது அறிக்கை:
 சிறு வியாபாரிகளை முற்றிலும் அழிக்கக்கூடிய சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், வர்த்தகம் செய்ய வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியினர் இந்தியாவை அடிப்படுத்தியதுபோல், மீண்டும் அன்னியர்களுக்கு இந்தியா அடிமையாகிவிடும்.
 எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தையும் மூடி, வணிகர்கள் அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டு வணிகர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை இந்திய அரசுக்கு காண்பிக்க வேண்டும். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் உண்ணாவிரத்தில் பங்கேற்குமாறும் வணிகர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment