Islamic Widget

November 23, 2010

சாலையின் மேல் தண்ணீர் செல்வதால் 2 நாட்களாக போக்குவரத்து பாதிப்பு

பரங்கிப்பேட்டை : புதுச்சத்திரம் அருகே சாலையின் மேல் தண்ணீர் செல்வதால் கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சத்திரம் அருகே கள்ளுகடைமேடு பஸ் நிறுத்தத்தில் இருந்து மேல் பூவாணிக்குப்பம் கிராமத்திற்குச் செல்ல நெடுஞ்சாலைத் துறை சாலை உள்ளது.

பருவமழை காரணமாக பெருமாள் ஏரியில் தண்ணீர் நிரம்பியதால் அங்கிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் பூவாணிக்குப்பம் கிராமத்திற்கு வந்ததால் விவசாய நிலங்கள் மூழ்கியுள்ளது. மேலும் பூவாணிக்குப்பம் சாலையில ஒரு கி.மீ., தூரத்திற்கு சாலையின் மேல் மூன்று அடி உயர்த்திற்கு தண்ணீர் செல்கிறது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பூவாணிக்குப்பத்தில் உள்ளவர்கள் கடலூர், சிதம்பரம் செல்ல கள்ளுக்கடை மேடு பகுதிக்கு வந்து பஸ் ஏற வேண்டும் என்பதால் இரண்டு நாட்களாக சம்பாரெட்டிபாளையம் வழியாக மேட்டுப்பாளையம் வந்து பஸ் ஏறுகின்றனர். பள்ளி மாணவர்கள் குள்ளஞ்சாவடி வழியாக கடலூருக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீர் பரவனாறு வழியாக வடிந்தால்தான் இயல்பு வாழ்க்கை திரும்பும்.


Source:dinamani

No comments:

Post a Comment