General Authority of Civil Aviation என்று அழைக்கப்படும் குடிமைப் பறணை பொது அதிகாரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பொன்றில் எதிர்வரும் நவம்பர் 7 முதல் சவூதி அரேபிய விமான நிலையங்களில் புகை பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி புகைப்பவர்களுக்கு 200/- சவூதி ரியால்கள் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கிறது. துணைப் பிரதமரும், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்ச்சருமான இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் ஒப்புதலைப் பெற்று இச்செய்தி அறிவிக்கப்படுவதாக பொது அதிகாரகத் தலைமை அதிகாரி அப்துல்லா ரெஹய்மி தெரிவித்துள்ளார்.
"ஆரோக்கியமான சூழலை விமான நிலையங்களில் ஏற்படுத்த உதவுமாறு குடிமக்களையும் வெளிநாட்டவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்" என்றார் அவர்.
மேலும் அவர் தெரிவிக்கையில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ள 11 விதிகளையும் அதிகாரிகள் சரிவர மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இத்துறையின் இன்னொரு அதிகாரி நிருபர்களிடம் பின்னர் தெரிவிக்கையில் "புகைப்பவர்களுக்கு வசதியாக, தனிப்பட்ட சிறு தடுப்புப்பகுதிகள் (Smoking Zones) அமைக்கப்படும்" என்று கூறினார்.
Source: inneram.com
October 20, 2010
சவூதி அரேபிய விமான நிலையங்களில் புகைப்பவர்களுக்கு 200/- சவூதி ரியால்கள் அபராதம்
Labels:
சவுதி அரேபியா செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
No comments:
Post a Comment