பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6ஆம் தேதியன்று அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் முகமாக ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்பட்டுள்ளன.
1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒவ்வொரு டிசம்பர் 6ஆம் தேதியன்றும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த ஆண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக இரயில்வே பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ரயில் நிலைய பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கம்போல 2 நாட்களுக்கு முன்பிருந்தே ரயில்களில் பார்சல்கள் அனுப்பத் தடைவிதிக்கப்படும். அதன்படி சனிக்கிழமை முதல் ரயில்களில் பார்சல்கள் அனுப்பத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் சந்தேகத்திற்கிடமாகத் திரியும் நபர்களைப் பிடித்து விசாரணை செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தின் முக்கிய நகரங்களின் ரயில் நிலையங்களில் மெட்டெல் டிடெக்டர், ஸ்கேனர் கருவி ஆகியவற்றின் மூலம் பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கப்படுகின்றன.
December 05, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- சென்னையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு
- இறப்புச் செய்தி
- ரியாத் விமான நிலையத்தில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்து
- அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு : திமுகவினர் ஆவேசம் !
- பரங்கிப்பேட்டை ஜசிஜசிஜ வங்கியில் பரபரப்பு !
- பரங்கிப்பேட்டையில் வாலிபால் போட்டி!
- நன்பன் நூா் அலி தி௫மணம்
- பரங்கிப்பேட்டையில் ஈகைத்திருநாள் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி
- கனிமொழி கோரிக்கை ஏற்பு: ஜாமீன் மனு இன்று விசாரணை!
- "ஆட்டம் காணும்' டவுன் பஸ்கள்: ஆட்டோக்கள் பெருக்கத்தால் பரிதவிக்கும் கடலூர் பயணிகள்

No comments:
Post a Comment