பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6ஆம் தேதியன்று அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் முகமாக ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்பட்டுள்ளன.
1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒவ்வொரு டிசம்பர் 6ஆம் தேதியன்றும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த ஆண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக இரயில்வே பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ரயில் நிலைய பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கம்போல 2 நாட்களுக்கு முன்பிருந்தே ரயில்களில் பார்சல்கள் அனுப்பத் தடைவிதிக்கப்படும். அதன்படி சனிக்கிழமை முதல் ரயில்களில் பார்சல்கள் அனுப்பத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் சந்தேகத்திற்கிடமாகத் திரியும் நபர்களைப் பிடித்து விசாரணை செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தின் முக்கிய நகரங்களின் ரயில் நிலையங்களில் மெட்டெல் டிடெக்டர், ஸ்கேனர் கருவி ஆகியவற்றின் மூலம் பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கப்படுகின்றன.
December 05, 2010
பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
- ஹஜ் செல்பவர்களுக்கு இலவச சிம்
- உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைப்பு- புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது
- பரங்கிப்பேட்டையில் பலத்த மழை இரவு பகல் இல்லாமல் தொடர்ந்து பலத்த மழை
- மதீனாவில் குளிர்ந்த காற்றுடன் மழை
- ஆசிரியரின் பாலியல் தொந்தரவு பள்ளி மாணவிகள் குமுறல்
- குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவரிடம் மறுவிசாரணை
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- உடல் வலிமைக்கும் (ஆண்மை) க்கும் கிஸ் மிஸ் சூப்பர்!
- உலகின் மிகப் பெரிய மக்கா கடிகாரம் !
- ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.1.5 லட்சம் நகை திருட்டு!
No comments:
Post a Comment