பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6ஆம் தேதியன்று அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் முகமாக ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்பட்டுள்ளன.
1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒவ்வொரு டிசம்பர் 6ஆம் தேதியன்றும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த ஆண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக இரயில்வே பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ரயில் நிலைய பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கம்போல 2 நாட்களுக்கு முன்பிருந்தே ரயில்களில் பார்சல்கள் அனுப்பத் தடைவிதிக்கப்படும். அதன்படி சனிக்கிழமை முதல் ரயில்களில் பார்சல்கள் அனுப்பத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் சந்தேகத்திற்கிடமாகத் திரியும் நபர்களைப் பிடித்து விசாரணை செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தின் முக்கிய நகரங்களின் ரயில் நிலையங்களில் மெட்டெல் டிடெக்டர், ஸ்கேனர் கருவி ஆகியவற்றின் மூலம் பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கப்படுகின்றன.
December 05, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- சிதம்பரம்- புதுச்சத்திரத்திற்கு கூடுதல் பஸ்: கலெக்டருக்கு மனு
- டாஸ்மாக் கடை முன் பெண்கள் முற்றுகை
- இரட்டை சூரியன் உள்ள கிரகங்கள் கண்டுபிடிப்பு
- ஹைதராபாத்தில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வெறியாட்டம்! ஊரடங்கு உத்தரவு!
- கடலூரில், இன்று: அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
- மாவட்டத்தில் நீடிக்கிறது தொடர் மழை பரங்கிப்பேட்டையில் 29 மி.மீ.,
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- ஜமாஅத்திற்கு வந்த காஸ் ஏஜன்ஸி
- வழக்கின் தீர்ப்பால் வாய்யடைத்த கொலை வெறியன் நரேந்திர மோடி !!
- மீனவர்கள் கடலுக்கு செல்லாததால்அன்னங்கோயில் பகுதி "வெறிச்'
No comments:
Post a Comment