கடலூர்:கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்ற ராமேஸ்வரம் விரைவு ரயில் லூப்லைன் வழியாக சென்ற போது, ரயில் பெட்டி உரசி நடைபாதை மீண்டும்
சேதமடைந்தது.சென்னை - மயிலாடுதுறை வழியாக கடந்த ஏப்., 23ம் தேதி முதல் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடலூர், திருப்பாதிரிபுலியூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள லூப்லைன் வழியாக, கடந்த ஆக., 27ம் தேதி விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறைக்கு பயணிகள் ரயில் விடப்பட்டது. அப்போது ரயில் பெட்டி, நடைபாதையில் உரசி சேதமடைந்தது. மேலும், ரயில் பெட்டி திடீரென குலுங்கியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இச்சம்பவத்திற்கு பின், திருச்சி மண்டல ரயில்வே மேலாளர் திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனை ஆய்வு செய்தார். பின், இந்த லூப்லைனில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு, மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டன.நேற்றிரவு 2 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனை கடக்கும் போது, ஏற்கனவே ரயில் பெட்டி உரசிய இடத்தில், மீண்டும் ராமேஸ்வரம் விரைவு ரயிலின் பெட்டி உரசியது. இதில் நடைபாதை சேதமடைந்தது.
Source: Dinamalar
October 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் மின் கம்பியை திருடியவர் மின்சாரம் பாய்ந்து பலி!
- பரங்கிப்பேட்டையில் இடியுடன் கூடிய பலத்த மழை
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- இரவு நேர ஹோட்டல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு?
- ஜெயிக்கப் போவது யாரு????
- கடலூர், நாகையில் புயல் எச்சரிக்கை கூண்டு
- சூனாமி நினைவு நாள்: கடலோர கிராமங்களில் அஞ்சலி
- லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தேர்தல் வெற்றி நிலவரம்!
- முஹமது யூனுஸ் & இபாயின் வெற்றியை கொண்டாடும் ரியாத் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள்
- இறப்புச் செய்தி
No comments:
Post a Comment