கடலூர் : அரியானா மாநில மத்திய கூட்டுறவு வங்கி உயர் அதிகாரிகள் கடலூர் மாவட்ட வங்கி செயல்பாடுகளை பார்வையிடுகின்றனர்.
கடலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தனி அலுவலர் அலுவலக செய்திக்குறிப்பு: தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் குழுக்களின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு தெரிந்து கொள்ள அரியானா மாநில மத்திய கூட்டுறவு வங்கி உயர் அதிகாரிகள்
குழு கடலூர் மாவட்டத்திற்கு இன்று வருகின்றனர். இக்குழுவினர் இன்றும், நாளையும் (21ம் தேதி) ரங்கநாதபுரம், பின்னலூர், பரங்கிப் பேட்டை, புதுச்சத்திரம், திருக்கண்டேஸ்வரம் மற் றும் கரைமேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பார்வையிடுகின்றனர். மேலும் நபார்டு வங்கி உயர் அதிகாரிகளும் பார்வையிட உள்ளனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Source: Dinamalar
No comments:
Post a Comment