September 08, 2010
கடலூர் கடலில் அலை சீற்றம்
கடலூர்:கடலூர் சில்வர் பீச்சில் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் கரையோரப் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது.பவுர்ணமி, அமாவாசை நாட்களில் கடல் அலையின் சீற்றம் வழக்கத்தைவிட அதிகமாக காணப்படும். அலையும் இரண்டு மீட்டர் உயரம் வரை எழும்பும். இந்த நாட்களில் கடல் அலை ஊருக்குள் புகுவதும், உள்வாங்குவதும் அடிக்கடி நிகழந்து வருகிறது. அமாவாசை நாள் என்பதால் கடலூர் சில்வர் பீச்சில் நேற்று அலை சீற்றம் காணப்பட் டது. இதனால் கடல் நீர் வழக்கத்தைவிட 50 மீட்டர் தூரத்திற்கு கரையை கடந்தது. கரையோரப் பகுதியில் மூன்று அடிக்கு மண் அரிப்பு காரணமாக பள்ளம் ஏற்பட்டது. எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் சில்வர் பீச்சில் நேற்று பொது மக்களின் வருகை குறைந்து காணப்பட்டது.
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டைக்கு முட்லூர்-புதுச்சத்திரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்படுமா?
- பூக்கள் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ மல்லிகை விலை க்ஷீ800 ஆனது
- பரங்கிப்பேட்டை : நீர் உயிர் நச்சு கருத்தரங்கம்
- கடலூர் எல்லைகளில் "செக்போஸ்ட்' துணை ராணுவம் தீவிர சோதனை
- கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும்: குரேஷி!
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
- 11-வது வார்டு உறுப்பினர் இபாயின் வெற்றி!
No comments:
Post a Comment