கிள்ளை:சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் கணிதம் மற்றும் இயற்பியல் பிரிவு வகுப்பு மாணவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் கணிதம் மற்றும் வேதியல் பிரிவு மாணவர்கள் நேற்று காலை கல்லூரி நுழைவு வாயிலில் நின்று கொண்டு நிரந்தர முதல்வரை நியமிக்க வேண்டும். எம்.எஸ்சி., கணிதம் பாட வகுப்பு துவக்க வேண்டும். சமச்சீர் கல்வி கொண்டு வருவதுடன், மற்ற நாட்டு பல்கலைக்கழகம் இந்தியாவில் தலையிடக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரிக்குள் சென்ற மாணவர்களை தடுத்து நிறுத்தினர். மற்ற துறை மாணவர்கள் ஸ்டிரைக்கிற்கு ஒத்துழைப்புத் தராமல் கல்லூரிக்குள் சென்றனர்.
இதனால் ஆவேசமடைந்த கணிதம் மற்றும் வேதியியல் துறை மாணவர்கள் கல்லூரிக்குள் சென்ற மாணவர்களை தாக்க முயன்றதால் மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது.தகவலறிந்த அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், சப் இன்ஸ் பெக்டர் மாரிமுத்து மற் றும் போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்படாத கணிதம் மற்றும் வேதியியல் துறை மாணவர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டுச் சென்றனர். மற்ற துறை மாணவர்கள் வழக் கம் போல் வகுப்புக்குச் சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?
- சவூதி: உணவை வீணடித்தால் அபராதம் – அதிரடி உணவகம்!
- மீண்டும் முற்றுகை மூடப்பட்டது "டாஸ்மாக்
- திண்ணை குழுமத்தின் சார்பாக விழிப்புனர்வு
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
- துக்க நிகழ்ச்சியில் தகராறு இருவர் மீது தாக்குதல்
- தமிழகத்தில் 'பாரத் பந்த்' பிசுபிசுத்தது!
No comments:
Post a Comment