Islamic Widget

September 19, 2010

உண்ணாவிரதம் பரங்கிப்பேட்டை

பரங்கிப்பேட்டை: அருகே உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு ஓய்வுப் பெற்ற தலைமை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பணிக்கொடை தொகை, மறு நியமன ஊதிய நிலுவைகள், ஆறாவது ஊதியக்குழு உத்தரவின்படி நிலுவை ஊதியங்கள் மற் றும் ஆசிரியர் பிற்கால சேமிப்பு தொகைகள் உட் பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிதரக் கோரி உண்ணாவிரதம் போராட் டம் நடத்தினர்.ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். ஓய்வுப்பெற்ற அலுவலர் சங்க செயலாளர் நம் மாழ்வார், வீரப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சங்க தலைவர் திருநாவுக்கரசு துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பன்னீர் செல்வம், சிதம்பரம் பங் கேற்றனர்.

No comments:

Post a Comment