பரங்கிப்பேட்டை,: கிள்ளை பகுதியில் குறைந்த மின் அழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கிள்ளை பேரூராட்சி சேர்மன் ரவிச்சந்திரன், தமிழக முதல் வர் மற்றும் மின் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு:கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட பிச்சாவரத்தில் சுற்றுலா மையம் செல்லும் சாலை, தைக்கால், சிங்காரகுப்பம், சி.மானம்பாடி, பொன்னந் திட்டு, கூழையார், முடசல் ஓடை பகுதிகளில் பல ஆண்டுகளாக குறைந்த மின் அழுத்தத்தால் தெருவிளக்குகள் எரிவதில்லை.வீடுகளிலும் மின் பற்றாக்குறை மற்றும் குடிநீர் பிரச்னை நீடிக்கிறது. இங்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சுனாமி குடியிருப்புகள், 14 சமுதாய கூடங்கள், சுயஉதவிக் குழுக்களால் நடத்தப் படும் காகித ஆலைகள் கட்டப்பட்டு மின் இணைப்பு கொடுக்கப்பட் டுள்ளது.கடந்த 30 ஆண்டுகளாக மின் ஒயர்கள் மாற்றப்படாமல் அப்படியே உள்ளது. இந்த ஆண்டு சிதம்பரம் மின் கோட்டத்தின் மூலம் பல கிராமங்கள் மற்றும் அனைத்து பேரூராட்சிகளிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பழைய ஒயர்கள் மாற்றப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தில் கிள்ளை பேரூராட்சி புறக்கணிக்கப்பட்டுள்ளது. பலமுறை நேரிலும், கடிதம் மூலமாகவும் சிதம்பரம் கோட்ட மின்பொறியாளருக்கு புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கிள்ளை பேரூராட்சி மூலம் மின்சார வாரியத்திற்கு மாதம் இரண்டு லட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தி வருகிறோம். எனவே குறைந்த மின் அழுத்தத்தை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட் டுள்ளது.
Source: Dinamalar
Subscribe to:
Post Comments (Atom)
- தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: 2 நாளில் ரூ.200 அதிகரித்தது
- பரங்கிப்பேட்டையில் போஸ்டர் பரபரப்பு!
- சிறையில் அடைக்கலாம்! ஆனால் எனது மன உறுதியை தகர்க்க முடியாது -அப்துல் நாஸர் மஃதனி!
- அனல்மின் நிலைய கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும்
- இறப்புச் செய்தி
- தவ்ஹீத் பள்ளியில் நோன்பு கஞ்சி விநியோகம்
- ஜமாஅத் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா: யூனுஸ் அறிக்கை.!
- மத்திய அரசின் முஸ்லீம்களுக்கு 4.5% உள் ஒதுக்கீட்டுக்கு தேர்தல் ஆணையம் திடீர் தடை
- முஸ்லிம் கைதிகளிடம் பாரபட்சம்: விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு!
- தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ: 47 பேர் பலி
No comments:
Post a Comment