சிதம்பரம் : சிதம்பரம் வடிகால் வாய்க்காலில் துர்நாற்றத் துடன் மனித உடல் மிதப் பதாக வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் வாகீசன் நகரையொட்டி வடிகால் வாய்க்கால் செல்கிறது. அந்த வாய்க்காலில் உள்ள பாலம் அருகே நேற்று காலை துர்நாற்றம் வீசியது. மேலும் வாய்க்காலில் கவிழ்ந்த நிலையில் ஏதோ மிதந்தது. மனித உடல் மிதப்பதாக தகவல் பரவியதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு கூடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த சிதம்பரம் நகர போலீசார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் வாய்க்காலில் இறங்கி பார்த்தபோது சாக்கு மூட்டையிலிருந்து துர்நாற்றம் வீசியது தெரியவந்தது.
இதனால் யாரையோ கொலை செய்து மூட்டையில் கட்டி வீசியுள்ளனர் என்ற சந்தேகம் போலீசாருக்கு வலுத்தது. உடன் பொக்லைன் மூலம் சாக்கு மூட்டையை கரைக்கு எடுத்து வந்து பிரித்துப் பார்த்தனர். அதில் அழுகிய நிலையில் இறந்த மீன்கள் இருந்தது. அதேப் போன்று ஐந்து மூட்டைகளில் இறந்த மீன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தினர். கொலை செய்து வாய்க்காலில் வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அணுகிய போலீசாருக்கு இறந்த அழுகிய மீன்கள் என தெரியவந்ததும் நிம்மதியடைந்தனர்.
நன்றி தினமலர்
Subscribe to:
Post Comments (Atom)
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
- புதிய டாஸ்மாக் கிளையை திறப்பதற்கு முன்பே உடனே இழுத்துமூட கோரிக்கை
- வீராணம் ஏரி திறப்பு: பரங்கிப்பேட்டையில் வெள்ள பெருக்கு
- புதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியீடு!
- மல்லிகைப் பூ ஒரு முழம் 50 ரூபாய்!
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- எம்.எல்.ஏ.செல்வி ராமஜெயத்திற்கு மீண்டும் சீட் கிடைக்கும்.
- பரங்கிப்பேட்டையில் புதிதாய் திறக்கப்பட்டுள்ள தம்மாம் ஷாபிங் செண்டர்!
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
No comments:
Post a Comment