கடலூர் : கடலூரில் மீன் பிடிக் கச் சென்று காணாமல் போன மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தாவிட்டால் சாலை மறியல் செய்வோம் என மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.
கடலூர் அடுத்த தம்மனாம்பேட்டையைச் சேர்ந் தவர் அஞ்சாபுலி (47). இவருக்குச் சொந்தமான விசைப் படகில் கடந்த 19ம் தேதி அதிகாலை கடலூர் முதுநகர் அடுத்த நஞ்சம்பேட்டை சங்கரன் (50), ஏழுமலை (53), பெரியக்குப்பம் கருப்பர் (55), சித்திரைப்பேட்டை சேகர் (55) உட்பட ஐந்து பேர் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
படகின் உரிமையாளர் அஞ்சாபுலி 20ம் தேதி மாலை மொபைல் போன் மூலம் கடலுக்குள் சென்ற மீனவர்களிடம் தொடர்பு கொண்டு பேசினார். அதன் பிறகு மீனவர்கள் நிலை குறித்து தெரியாததால் அச்சமடைந்த மீனவர்கள், காணாமல் போனவர்களை கண்டு பிடித்துத் தரக்கோரி 26ம் தேதி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கடலோர காவல் படை ஹெலிகாப்டர் மற்றும் கப்பல்கள் மூலம் தேடுவதாக கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்தார். ஆனால் காணாமல் போன மீனவர்கள் குறித்து நேற்று காலை வரை எவ்வித தகவல்களும் தெரியவில்லை. இதனால் கடலூர் பகுதியில் உள்ள மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மேலும், 10க்கும் மேற் பட்ட மீனவர்கள் வெள் ளைக் கொடி கட்டிய நான்கு விசைப் படகுகளில் மீனவர்களைத் தேடி கடலுக்குள் சென்றனர். இந்நிலையில் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கடலூர் மாவட்ட மீன் வளத் துறை உதவி இயக்குநர் சீனுவாசனுடன் (பொறுப்பு) 2 மணி நேரம் பேச்சுவார்தை நடத்தினர். காணாமல் போன மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தாவிட்டால் சாலை மறியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர். தொடர்ந்து மீனவ கிராமங்களில் பதட்டம் நிலவி வருகிறது.
நன்றி தினமலர்
August 28, 2010
"மாயமான மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தாவிட்டால் மறியல்'
Subscribe to:
Post Comments (Atom)
- உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைப்பு- புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது
- மதீனாவில் குளிர்ந்த காற்றுடன் மழை
- ஆசிரியரின் பாலியல் தொந்தரவு பள்ளி மாணவிகள் குமுறல்
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.1.5 லட்சம் நகை திருட்டு!
- வெள்ளாற்றில் கடல்நீர் உட்புகுவதை தடுக்கக் கோரிக்கை
- புனித ரமளான் மதீனா இப்தார் நிகழ்சிகள்
- லஞ்சம் பெற்றுத்தான் அரசு பணிகள் நடக்கின்றன : நரேஷ் குப்தா கவலை!
- பரங்கிப்பேட்டை வாரச்சந்தை ஏலம் கடந்த ஆண்டைவிட இருமடங்கு உயர்வு
- தானே புயல் சென்னையில் கரை கடக்கிறது: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
No comments:
Post a Comment