பரங்கிப்பேட்டை: புதுச்சத்திரம் அருகே 108 ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சத்திரம் அடுத்த சிலம்பிமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் சாலை விபத்தில் படுகாயமடைந்ததால் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்குள் முனுசாமியை புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். ..
இதனையடுத்து புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் சென்றுள்ளது. ஏன் தாமதமாக வந்தீர்கள் எனக் கேட்டு ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேஷ்ராவை, அதே பகுதியைச் சேர்ந்த வேலு தாக்கினார். இதுகுறித்து ராஜேஷ்ராவ் கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து வேலுவைத் தேடிவருகின்றனர்.
August 31, 2010
108 ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய வாலிபருக்கு வலை
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?
- சவூதி: உணவை வீணடித்தால் அபராதம் – அதிரடி உணவகம்!
- மீண்டும் முற்றுகை மூடப்பட்டது "டாஸ்மாக்
- திண்ணை குழுமத்தின் சார்பாக விழிப்புனர்வு
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
- துக்க நிகழ்ச்சியில் தகராறு இருவர் மீது தாக்குதல்
- தமிழகத்தில் 'பாரத் பந்த்' பிசுபிசுத்தது!
No comments:
Post a Comment