Islamic Widget

August 31, 2010

பு.முட்லூர் - புதுச்சத்திரம் சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பரங்கிப்பேட்டை: பு.முட்லூரில் இருந்து தச்சக்காடு வழியாக புதுச் சத்திரம் செல்லும் சாலையை சீர் செய்ய வேண்டும் என பொதுமக் கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட் லூரில் இருந்து மஞ்சக்குழி, அருண் மொழிதேவன், தச் சக்காடு, சேந்திரக்கிள்ளை, பால்வாதுண்ணான் வழியாக புதுச்சத்திரத்திற்கு நெடுஞ்சாலை துறை சாலை உள்ளது. இச் சாலை வழியாக தினமும் இரண்டு அரசு டவுன் பஸ்கள் இயக் கப்படுகிறது...


100க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின் றன. ஆனால் சாலை குண் டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளனர். மழைக் காலங்களில் குண்டும், குழியுமாக உள்ள இடங்களில் தண் ணீர் தேங்கி குட்டை போல் இருப்பதாலும், மேலும் தச்சக்காடு, அருண்மொழிதேவன், சேந்திரக்கிள்ளை, மஞ்சக் குழி ஆகிய கிராமங்களில் அரும்பு, குண்டு மல்லி உள்ளிட்ட பூ வகைகள் அதிகளவில் பயிர் செய்து வருகின்றனர். பூ வகை களை விற்பனை செய்ய பு.முட்லூருக்கு மொபட், சைக்கிள் உள் ளிட்டவைகளில் செல்வதால் வாகனங் கள் அடிக்கடி பழுதாகி விடுகிறது. குறிப் பிட்ட நேரத் திற்கு பூ வகைகளை எடுத்துச் செல்ல முடியாததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. பு.முட்லூரில் இருந்து புதுச்சத்திரம் வரையிலான சாலையை நெடுஞ்சாலைத் துறையினர் சீர் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source: Dinamalar

No comments:

Post a Comment