உலகக் கோப்பைத் தொடரின் லீக் ஆட்டத்தில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் 120 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இது ஒரு நாள் போட்டிகளில் டெண்டுல்கர் அடிக்கும் 47 வது சதமாகும். உலகக் கோப்பை போட்டிகளில் டெண்டுல்கர் அடிக்கும் 5 வது சதமாகும்.
உலகக் கோப்பைப் போட்டிகளில் சௌரவ் கங்குலி, டெண்டுல்கர்,ஸ்டீவ் வாஹ் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் மட்டுமே அதிகபட்சமாக இதுவரை 4 சதம் அடித்துள்ளனர். இன்றைய போட்டியில் சதமடித்ததன் மூலம் டெண்டுல்கர் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சதம் அடித்த சாதனையை புரிந்துள்ளார். கங்குலி மற்றும் ஸ்டீவ் வாஹ் ஓய்வு பெற்று விட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணிக் கேப்டன் ரிக்கி பாண்டிங்குக்கு இச்சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு உள்ளது.
Source:inneram
No comments:
Post a Comment