ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரங்களான மக்கா, மதீனா ஆகியவற்றுக்கு பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் உலகம் முழுவதும் இருந்து ஹஜ் புனிதப்பயணமாக ஆண்டுதோறும் செல்வது உண்டு.
இந்த புனிதப்பயணம் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. அடுத்த வாரம் இந்த பயணத்துக்காக உலக நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு வரும்போது அல்கொய்தா தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அந்த நாட்டுக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதைத்தொடர்ந்து அந்த நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக இளவரசர் நயீஃப் கூறுகையில், எந்த தீவிரவாத தாக்குதலையும் முறியடிக்கும் வல்லமை சவுதி அரேபியாவுக்கு இருக்கிறது என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், ஹஜ் புனிதப்பயணம் வருபவர்களின் பாதுகாப்புக்கு எந்த குந்தகமும் ஏற்படாமல் பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். மோசமான விளைவு எதுவும் நடக்க இறைவன் விடமாட்டார் என்று குறிப்பிட்டார்.
Source: inneram
November 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- இறைத்தூதரை அவமதிக்கும் செயல்:மரணத்தண்டனை வழங்கும் மசோதாவுக்கு குவைத்தில் அங்கீகாரம்!
- பரங்கிப்பேட்டை பைத்துல் மால் கமிட்டியின் பிரசுரம்
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- திருமண வாழ்த்து என்ற பெயரால்!..
- மல்லிகைப் பூ ஒரு முழம் 50 ரூபாய்!
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- சென்னையில் கடும் பனி மூட்டம்: விமானங்கள், ரயில் சேவை பாதிப்பு!
- ஓட்டுனர் உரிமம் பெற இருப்பிட சான்றுக்கு குடும்ப அட்டையை ஏற்றுக்கொள்ள கோரிக்கை
- ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: நான்கு பேர் கைது
இறையருளைக்கொண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்றிருக்கும் உலக மக்கள்அனைவர்கும் சவுதிஅரேபியா அரசாங்கம் தகுந்த பாதுக்காப்பு கொடுக்கும்.
ReplyDelete