காட்டுமன்னார்கோவில்:வீராணம் ஏரியில் இருந்து வெள்ள காலங்களில் வெள்ளாறு வழியாக தண்ணீர் வெளியேற்ற சேத்தியாத்தோப்பு அருகே பாழ்வாய்க்காலில் 6 கோடி ரூபாய் செலவில் ஷட்டருடன் கூடிய மதகு அமைக்கும் பணி நடந்து வருகிறது.கடலூர் மாவட்டம் வீராணம் ஏரிக்கு
நீர்வரத்து அதிகரிக்கும் மழை, வெள்ளக்காலங்களில் உபரி நீர் வெள்ளியங்கால் ஓடை வழியாக கொள்ளிடம் ஆற்றிலும், சேத்தியாத்தோப்பு அருகே பாழ்வாய்க்காலில் வீராணம் புதிய மதகு (வி.என்.எஸ்) வழியாக வெள்ளாற்றிலும் தண்ணீர் வெளியேற்றப்படும். இந்த இரு மதகுகள் வழியாக கடந்த காலங்களில் ஒரே சமயத்தில் வினாடிக்கு 5,000 கன அடி வரை தண்ணீர் வெளியேற்றப்படும். கடந்த 2005ம் ஆண்டு ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பாழ்வாய்க்கால் மதகு சேதம் அடைந்தது.அதனை தொடர்ந்து புதிய மதகு கட்டி, இரண்டு கி.மீ., தூரம் கரைகள் பலப்படுத்த பொதுப்பணி துறை சார்பில் திட்டம் தயாரித்து 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
அதன்படி இரண்டு கி.மீ., தூரம் 33 மீட்டர் அகலத்தில் கரைகள் பலப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது. தற்போது மதகு அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. கடந்த காலங்களில் வினாடிக்கு 2,000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதற்@க சிரமம் ஏற்படும் நிலையில் தற்போது அமைக்கப்படும் மதகின் வழியாக ஒரே சமயத்தில் 6,190 கன அடி தண்ணீர் வெளியேற்ற முடியும் என பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தற்போது மழை துவங்கியுள்ள நிலையில் பணிகள் பாதிக்காத வகையில் மார்ச் மாதத்திற்குள் முடிக்க உதவி பொறியாளர் உமா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
Source: Dinamalar photos pno.news
November 06, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் வழியாக குதித்த பயணி: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
- பாஸ்போர்ட் பெற புதியமுறை: கலெக்டர் அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் !
- சவூதி: மனைவியை அடித்தவருக்கு நூதன தண்டனை
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- இறப்புச் செய்தி
- குஜராத்தில் நரேந்திர மோடி அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்.
- தி.நகரில் சீல் வைத்த கடைகளை தற்காலிகமாக திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
- பரங்கிப்பேட்டை கடலில் மூழ்கி பீகார் மாணவர் பலி
No comments:
Post a Comment