கடலூர்: தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக குடோன்களில் சலுகை விலையில் சிமென்ட் விற் பனை துவங்கியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட் டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு உத்தரவின் பேரில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் சார்பில் சிமென்ட் மூட்டை 200 ரூபாய்க்கு சலுகை விலையில் விற் பனை செய்யப்பட்டு வருகிறது.
புதிதாக 1,000 சதுர அடி வரை வீடு கட்டுபவர்கள் சலுகை விலையில் சிமென்ட பெற்றிட உரிய வரைவு காசோலை மற் றும் ரேஷன் கார்டு நகலை விண்ணப்பத்துடன் இணைத்து அருகில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கழக குடோன்களில் கொடுத்து 8 தவணைகளில் சிமென்ட் மூட்டைகள் பெற்றுக் கொள்ளலாம். வீடுகள் பழுது பார்க்க மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு 50 மூட்டை சிமென் டுகளை நேரடியாக பணம் செலுத்தி பெறலாம். இதுகுறித்து மேலும் விவரம் வேண்டுவோர் கடலூர் (04142-233301), குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி (04142-253796), விருத்தாசலம் (04143-238382), சிதம்பரம் (04144-230802), காட்டுமன்னார்கோவில் (04144-262013), திட்டக்குடி (04143-255214) ஆகிய தொலைபேசிகளிலோ அல்லது கடலூரில் உள்ள மண்டல மேலாளரை (04142-221621, 221622, 221623) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Source: Dinamalar
October 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- கடலூரில், இன்று: அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
- இறப்புச் செய்தி
- கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 23ம் தேதி துவக்கம்
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- அண்ணாமலைப் பல்கலை. எம்.ஏ., எம்.எஸ்சி. வகுப்புகள் நாளை தொடக்கம்
- விஜய் ஆதரவு அதிமுகவுக்கு
- பிச்சாவரம் படகு சவாரி மூலம்ரூ.40 ஆயிரம் கூடுதல் வருவாய்
- அரசு மருத்துவமனையில் இரவு பணியில்டாக்டர்கள் நியமிக்க மக்கள் வலியுறுத்தல்
- மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது?
No comments:
Post a Comment