Islamic Widget

April 11, 2012

இந்தியாவில் சுனாமி வரும் வாய்ப்பு இல்லை



இந்தோனோஷியாவில் வட சுமத்ராவில் ரிக்டரில் 8.7 பதிவான பூகம்பத்தால் இந்திய கடலோரத்தில் சுனாமி ஏற்படும் வாய்ப்பு இல்லை என்று இந்தியா அறிவித்துள்ளது.

முன்னதாக தேசிய பேரிடர் மையம் அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் தமிழக, ஆந்திர கடலோர பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுத்திருந்தது.


தற்போது இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள பூகம்பம் சுனாமியை ஏற்படுத்தும் வகையிலானது இல்லை என்றும் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு அந்தமானில் மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அலுவலகத்தில் கூடிய இளைஞர்களை உஷார் நிலையிலிருக்குமாறு டாக்டர். நூர் முஹம்மத் கூறினார்.


மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவின்படி வருவாய் துறை மற்றும் காவல் துறையினருடன் இணைந்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத்தினர் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வதாக பேரூராட்சித் தலைவர் எம்.எஸ் முஹமது யூனுஸ் கூறினார்.

No comments:

Post a Comment