பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் போக்குவரத்திற்கு
இடையூறாக சாலையிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள்
பாதிக்கப்படுகின்றனர்.பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் அரசு மருத் துவமனை,
வங்கிகள், பத்திரப்பதிவு அலுவலகம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் என
அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. விடுமுறை நாட்களைத் தவிர்த்து
மற்ற நாட்களில் எப்போதுமே அந்த பகுதி பிசியாகவே இருக்கும்.
அலுவலங்களுக்குச் செல்பவர்கள் தங்களது கார், பைக்குகள் மற்றும் மொபட்டுகளை சாலையிலேயே நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு சென்று விடுகின்றனர். மேலும் தற்போது கோடை காலமாக இருப்பதால் அந்த தெருவில் ஒரு சில இடங்களில் உள்ள மரத்தின் நிழலில் பைக்குகளை நிறுத்த வேண்டும் என்பதற்காக அதிகமானோர் மோட்டார் பைக்குகளை போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்திவிட்டுச் சென்று விடுகின்றனர்.இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான நேரங்களில் அந்த தெரு வழியாக கார் உள்ளிட்ட எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் கார், பைக்குகள் உள்ளிட்ட வாகன உரிமை யாளர்கள் மீது பரங்கிப்பேட்டை போலீசார் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment