Islamic Widget

December 03, 2011

பரங்கிப்பேட்டை பத்திர பதிவு அலுவலகத்தில் இருக்கை இல்லாத அவலம்!



பரங்கிப்பேட்டை:  பரங்கிப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் (SUB REGISTRAR'S OFFICE) தினந்தோறும் பரங்கிப்பேட்டையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

ஒரு நாளைக்கு பல இலட்சம் மதிப்புள்ள நிலங்கள் பத்திர பதிவு செய்து வருகின்றனர்.  ஆனால் நூற்றுக்கனக்கான மக்கள் வந்து செல்லும் இந்த அலுவலகத்தில் இருக்கை வசதி இல்லாத காரணத்தால் பல மணி நேரம் பொதுமக்கள் நிற்க வேண்டிய சூழ்நிலையுள்ளது.  குறிப்பாக பெண்கள் மற்றும் முதியோர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்... 
ஆகையால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு பத்திர பதிவு அலுவலகத்தில் இருக்கை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்...!

நடவடிக்கை எடுப்பார்களா? பொறுத்துயிருந்து பார்ப்போம்!!!


நன்றி:tntjpno

No comments:

Post a Comment