சிதம்பரம் : சிதம்பரம் பஸ் நிலையத்தில் பயணியிடம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை அபேஸ் செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.நாகப்பட்டினம் மாவட் டம், நாகூர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் சம்சுதீன். துபாயில் பணிபுரிந்து வருகிறார். விமானம் மூலம் சென்னை வந்த அவர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து வேளாங்கன்னி அரசு பஸ்சில் வந்தார்.நேற்று அதிகாலை 3 மணிக்கு பஸ் சிதம்பரம் பஸ் நிலையம் வந்தது. சம்சுதீன் சிறுநீர் கழிக்க பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். அப்போது அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்து பர்சை யாரோ பிக்பாக்கெட் அடித்துக் கொண்டு தப்பியோடினார்.திருடு போன பர்சில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள துபாய் திராம்ஸ், ஏ.டி.எம்., இன்சூரன்ஸ் கார்டுகள், தேசிய அடையாள அட்டை உள்ளிட்டவை வைத்திருந்தார்.சம்சுதீன் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
August 08, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- 8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு!
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இறப்புச் செய்தி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு
No comments:
Post a Comment