சிதம்பரம் : சிதம்பரம் பஸ் நிலையத்தில் பயணியிடம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை அபேஸ் செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.நாகப்பட்டினம் மாவட் டம், நாகூர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் சம்சுதீன். துபாயில் பணிபுரிந்து வருகிறார். விமானம் மூலம் சென்னை வந்த அவர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து வேளாங்கன்னி அரசு பஸ்சில் வந்தார்.நேற்று அதிகாலை 3 மணிக்கு பஸ் சிதம்பரம் பஸ் நிலையம் வந்தது. சம்சுதீன் சிறுநீர் கழிக்க பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். அப்போது அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்து பர்சை யாரோ பிக்பாக்கெட் அடித்துக் கொண்டு தப்பியோடினார்.திருடு போன பர்சில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள துபாய் திராம்ஸ், ஏ.டி.எம்., இன்சூரன்ஸ் கார்டுகள், தேசிய அடையாள அட்டை உள்ளிட்டவை வைத்திருந்தார்.சம்சுதீன் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
August 08, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!
- கடலூர் அருகே பலத்த மழை: இடிதாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி
- கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
No comments:
Post a Comment