Islamic Widget

April 04, 2011

9ம் தேதி முதல்வர் வருகை கடலூரில் ஏற்பாடுகள் தீவிரம்

கடலூர் : கடலூரில் வரும் 9ம் தேதி முதல்வர் கருணாநிதி தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளதால் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் தி.மு.க., நான்கு தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான பா.ம.க, 2 இடங்களிலும், காங்., ஒரு இடத்திலும், வி.சி., கட்சி 2 இடங்கள் உட்பட 9 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து முதல்வர் கருணாநிதி வரும் 9ம் தேதி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடக்கவுள்ள பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டுசேகரிக்கிறார். இதற்காக மாவட்ட தி.மு.க., சார்பில் கூட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நேற்று முதல் மேடை அமைக்கும் பணி, பாதுகாப்பு கட்டைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

No comments:

Post a Comment