டெல்லி: இந்திய அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்தும் முடிவுக்கு வந்துள்ளன. சில தினங்களுக்கு முன்புதான் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 3 வரை உயர்த்தி மக்களை அழ வைத்தன. இந்த விலை உயர்வு பல்வேறு மட்டத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இருந்தாலும் டீஸல் மற்றும் எரிவாயுவை மானியத்தில் தருவதால் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறிவந்தன எண்ணெய் நிறுவனங்கள்.
இப்போதைக்கு டீஸல் விலையை உயர்த்தக் கூடாது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டீஸல், எரிவாயு விலையை உயர்த்தினால் வரும் 5 மாநிலத் தேர்தல்களை அது பாதிக்கும் என்று காங்கிரஸ் கருதுகிறது.
டீஸல் விலை உயர்வு சாத்தியமில்லை என்பதால், மீண்டும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 1 வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.பெட்ரோல் விலையை ஒரே ஆண்டில் இதுவரை எட்டு முறை உயர்த்தி சாதனைப் புரிந்துள்ளன எண்ணெய் நிறுவனங்கள். இப்போது விலை உயர்வை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதால் திடீர் திடீரென எந்த அறிவிப்புமின்றி உயர்த்திக் கொண்டு வருகின்றன.
January 07, 2011
அடுத்த சுற்று பெட்ரோல் விலையேற்றத்துக்கு ரெடியாகும் எண்ணெய் நிறுவனங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?
- துக்க நிகழ்ச்சியில் தகராறு இருவர் மீது தாக்குதல்
- சவூதி: உணவை வீணடித்தால் அபராதம் – அதிரடி உணவகம்!
- மீண்டும் முற்றுகை மூடப்பட்டது "டாஸ்மாக்
- குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- வெள்ளத்தில் மிதக்கிறது டெல்லி
- இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
- செல்பேசியால் மூளை புற்றுநோய்?
No comments:
Post a Comment