கடலூர் : புதுச்சத்திரம் - பரங்கிப்பேட்டை சாலையை பாதுகாக்க தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிதம்பரம் அடுத்த வில்லியநல்லூர் கிராமத்தில் இயங்கி வரும் மனித உரிமைகள் கழக அமைப்பாளர் ராஜேந்திரன்,
கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: புதுச்சந்திரம் - பரங்கிப்பேட்டை சாலையை ஒட்டியே பக்கிங்காம் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயை தூர் வாரியபோது சாலையின் பாதுகாப்பை கருதாமல் பல இடங்களில் சாலை ஓரத்திலேயே வெட்டப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக இந்த சாலையில் பல இடங்களில் உடைத்துக் கொண்டு கால்வாய்க்கு சென்றன. இதனால் சாலை பல இடங்களில் பழுதடைந்துள்ளது. இந்த சாலையை பாதுகாத்திட கால்வாயை ஒட்டி தடுப்புச் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Source:dinamalar
December 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
No comments:
Post a Comment