அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் 32ஆவது முறையாக தள்ளி வைக்கப்பட்டது.
அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கடந்த 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, புவனகிரி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட்டார். ஒரே நேரத்தில் இவ்வாறு போட்டியிட்டதால் இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்றும் அவர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு தொடரலாம் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதனடிப்படையில் புவனகிரி தொகுதி தேர்தல் அதிகாரி செல்வமணி பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் 2007ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் ஜெயலலிதா மேல்முறையீட்டின்படி உச்சநீதிமன்றம் இவ் வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை பிறப்பித்தது.
இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதால் அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் வழக்கு விசாரணைக்கு வரும்போது தள்ளி வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இவ்வழக்கு பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்துபோது நீதிபதி இளங்கோவன் வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதிக்குத் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
Source:.inneram
December 03, 2010
பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான வழக்கு 32ஆவது முறையாக ஒத்திவைப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
- குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்
- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?
- முஸ்லிம் கைதிகளிடம் பாரபட்சம்: விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு!
- சவூதி பொதுமன்னிப்பு:புனித யாத்திரை மற்றும் சுற்றுலா விசா காலாவதியானவர்களுக்கு மட்டும்!!!
- வெள்ளத்தில் மிதக்கிறது டெல்லி
- வேட்புமனுதாக்கல் - இன்று கடைசி!
- இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
- செல்பேசியால் மூளை புற்றுநோய்?
- சட்டப்பேரவை முற்றுகை-அணு உலை எதிர்ப்பாளர்கள் கைது!
- மீனவர்களின் வலையில் 5 டன் சுறாக்கள் சிக்கின
No comments:
Post a Comment