அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் 32ஆவது முறையாக தள்ளி வைக்கப்பட்டது.
அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கடந்த 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, புவனகிரி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட்டார். ஒரே நேரத்தில் இவ்வாறு போட்டியிட்டதால் இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்றும் அவர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு தொடரலாம் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதனடிப்படையில் புவனகிரி தொகுதி தேர்தல் அதிகாரி செல்வமணி பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் 2007ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் ஜெயலலிதா மேல்முறையீட்டின்படி உச்சநீதிமன்றம் இவ் வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை பிறப்பித்தது.
இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதால் அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் வழக்கு விசாரணைக்கு வரும்போது தள்ளி வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இவ்வழக்கு பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்துபோது நீதிபதி இளங்கோவன் வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதிக்குத் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
Source:.inneram
December 03, 2010
பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான வழக்கு 32ஆவது முறையாக ஒத்திவைப்பு!
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- நஷ்டவாளர்கள் யார்?
- பஸ்சில் சென்ற பெண்ணிடம் நகை திருட்டு!
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- புதிதாக கட்டப்படும் வாத்தியாப்பள்ளி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு

No comments:
Post a Comment