Islamic Widget

November 26, 2010

கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் : இந்திய ஜனநாயக கட்சி

விருத்தாசலம் : கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் வலியுறுத்தி பேசினார். விருத்தாசலத்தில் பல்வேறு இடங்களில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கொடியேற்று விழா நடந்தது. மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

மாவட்ட இணை தலைவர் தர்மலிங்கம், நகர தலைவர் பார்த்தசாரதி, செல்வராயர், ஹரிதாஸ்பாபு முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சவுந்தர்ராஜன் வரவேற்றார். விருத்தாசலம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை, பாலக்கரை, பெரியார்நகர் உள்ளிட்ட இடங்களில் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் கொடியேற்றி பேசினார். முன்னதாக தொகுதி வேட்பா ளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நிறுவனர் பாரிவேந்தருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் பாரி வேந்தர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய ஜனநாயக கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும். விருத்தாசலம் உட்பட 12 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் 75 சதவிகிதம் வேட்பாளர்களை அறிவித்து விடுவோம். 46 தொகுதியில் நாங்கள் வலுவாக உள்ளோம். 20 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. தமிழக கிராமங்களில் உள் கட்டமைப்பு வசதிகள் இல்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கள் இல்லை. இதில் இந்த அரசு கவனம் செலுத்தவில்லை. நான் வள் ளளாக இருக்க நீங்கள் வறுமையில் இருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய ஆளும் அரசின் நிலைபாடு. இலவசங்களை வழங்கி மக்களை வறுமையில் தள்ளுகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை முற்றிலும் ஒழிப்போம்.
மின்சார பற்றாக்குறை பிரச்னைக்கு தரமில்லாத நிலக்கரியை வாங்குவதும், முறையாக பராமரிக்காமலிருப்பதும் தான் காரணம். தன் சுய லாபத்திற்காகவே தரமில்லாத நிலக்கரியை வாங்குகின்றனர். தமிழகம் விவசாயத்தில் முன்னேற பொறியியல் கல்லூரிகளுக்கு நிகராக விவசாய கல்லூரிகளை அமைக்க வேண்டும். விருத்தாசலத்தை பொருத்தவரை பொறியியல் கல்லூரி, பெண்கள் கல்லூரி இல்லை. எங்கள் வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றால் இந்த கல்லூரிகள் அமைய நடவடிக்கை எடுப்போம். விருத்தாசலத்தை தலைநகராக கொண்டு புதிய மாவட்டமாக பிரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source:dinamalar

No comments:

Post a Comment