பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே வடிகால் வாய்க்காலில் போடப்பட்ட தற்காலிக சாலை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. பரங்கிப்பேட்டையில் இருந்து சிதம்பரம் செல்லும் நெடுஞ்சாலையில் அகரம் ரயிலடி அருகே உள்ள பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டப்பட்டது. அதற்காக போக்குவரத்து பாதிக்காமல் இருக்க அரியகோஷ்டி வடிகால் வாய்காலில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டது.
அச்சாலை வழியாக பரங்கிப்பேட்டையில் இருந்து சிதம்பரம் செல்லும் அனைத்து வாகனங்களும் சென்று வந்தன. கடந்த ஆண்டு புதிய பாலம் வழியாக போக்குவரத்து இயக்கப்பட்டது. ஆனால் அரியகோஷ்டி வடிகால் வாய்க்காலில் போடப்பட்ட தற்காலிக சாலை அகற்றப்படாமல் இருந்தது. இதனால் மழை, வெள்ள காலங்களின்போது அரியகோஷ்டி, சின்னகுமட்டி, பெரியகுமட்டி, மஞ்சக்குழி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் நெற்பயிர்களில் தேங்கிய தண்ணீர் வடிய வழியில்லாததால் பாதிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு வெள்ளத்தின்போது தற்காலிக சாலையை அகற்றகோரி விவசாயிகள் கோரிக்கையை அதிகாரிகள் அலட்சியப்படுத்தியதால் விவசாயிகள் சாலை மறியல் செய்தனர். இந்நிலையில் நேற்று பரங்கிப்பேட்டை நெடுஞ்சாலைத்துறையினர் வடிகால் வாய்க்காலில் இருந்த தற்காலிக சாலையை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்.
Source:dinamalar
November 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- புகை பழக்கத்தில் இருந்து மீள மூலிகை சிகரெட் தயாரிப்பு
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- தமிழக சட்ட மேலவை தேர்தல்: ஆலிம்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
- குவைத்தில் புனித அரஃபா நாள் சிறப்பு நிகழ்ச்சி
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு ஏற்பாடு செய்த வரலாற்றுச் சுற்றுலா / Kuwait Tamil Islamic Committee (K-Tic) arranged "Trip to Failaka"
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
No comments:
Post a Comment