கடலூர் : சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி பொது மக்களுக்கு இடையூறாக உள்ள சாலையோர கோவில்கள் அகற்றும் பணி தொடங்கின. குஜராத் மாநிலத்தில் இருந்து ஆக்கிரமிப்பு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் உள்ள கோவில்களை அகற்ற தீர்ப்பு கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் இந்த தீர்ப்பினை பின்பற்றி பொது மக்களுக்கு இடையூறாக அரசு இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மத சம்மந்தமான கோவில்களை அகற்ற சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் சாலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில்களை கணக்கெடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 3,142 கோவில்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்திலேயே திட்டக்குடி தாலுகாவில் மட்டும் 1,290 கோவில்கள் சாலையோர புறம்போக்கில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் முதலில் விருத்தாசலம், கிள்ளை பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டுள்ள கோவில்கள் முதற்கட்ட மாக அகற்றப்பட்டன. விரைவில் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதியில் உள்ள கோவில்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
Source:dinamalar photos: pno.news
November 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- நஷ்டவாளர்கள் யார்?
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- புதிதாக கட்டப்படும் வாத்தியாப்பள்ளி
- பரங்கிப்பேட்டையில் வாலிபால் போட்டி!
No comments:
Post a Comment