தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் கோவை பூக்கள் அங்காடிக்கு விற்பனைக்கு வரும் பூக்களின் வரத்து பாதிக்கும் கீழாக குறைந்துள்ளது இதன் காரணமாக பூக்களின் விலை தாறுமாறாக கூடியுள்ளது.
கோவைக்கு பூஅங்காடிக்கு சத்தியமங்கலம், மதுரை, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் மல்லிகை, ரோஜா பூக்கள் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் இங்கு விற்பனைக்கு வரும் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. பொதுவாக தினமும் 5 டன் மல்லிகை, 75,000 ரோஜாப்பூக்கள் வரும். தற்போது ஒரு டன் மல்லிகை, 30,000 ரோஜாப் பூக்கள் மட்டுமே வருகிறது.
இதுகுறித்து அங்கிருந்த பூ வியாபாரி ஒருவர் கூறுகையில் 'வழக்கமான நாட்களில் கிலோ ரூ.80 முதல் 100 வரைக்கும் மல்லிகை விலை போகும் ஆனால் தற்போது மல்லிகைப்பூ கிலோ ரூ.850க்கும் ரோஜாப்பூ கொத்து (20 பூக்கள் அடங்கியது ) ரூ.40 முதல் ரூ.80 வரையிலும் விற்கப்பட்டவை தற்போது ரூ.150 முதல் 200 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது’ என்றார்
Source:inneram
November 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- 8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு!
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இறப்புச் செய்தி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு

No comments:
Post a Comment