பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே விஷ வண்டுகளை அழிக்க தீயணைப்பு படையினர் தயக்கம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிதம்பரம் - கடலூர் தேசியநெடுஞ்சாலையில் இருந்து பெரியகுமட்டி கிராமம் செல்லும் வழியில் பனைமரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டியுள்ளது. அந்த வழியாக வரும் பொதுமக்கள், பள்ளி மாணவர்களை விஷ வண்டுகள் விரட்டி சென்று கடித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெரியகுமட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, காசிராஜன், தட்சணாமூர்த்தி விஷ வண்டுகளால் தாக்கப்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனால் மக்கள் அவ்வழியே செல்ல அஞ்சுகின்றனர். பெரியகுமட்டி கிராம மக்கள் பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு நேரடியாக சென்று புகார் தெரிவித்தும் தீயணைப்பு படையினர் விஷ வண்டுகளை அழிக்க வரவில்லை என குற்றச் சாட்டை எழுப்பியுள்ளனர். பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க கடலூர் தீயணைப்பு துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Source: Dinamalar
November 09, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- நஷ்டவாளர்கள் யார்?
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
No comments:
Post a Comment