பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே விஷ வண்டுகளை அழிக்க தீயணைப்பு படையினர் தயக்கம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிதம்பரம் - கடலூர் தேசியநெடுஞ்சாலையில் இருந்து பெரியகுமட்டி கிராமம் செல்லும் வழியில் பனைமரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டியுள்ளது. அந்த வழியாக வரும் பொதுமக்கள், பள்ளி மாணவர்களை விஷ வண்டுகள் விரட்டி சென்று கடித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெரியகுமட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, காசிராஜன், தட்சணாமூர்த்தி விஷ வண்டுகளால் தாக்கப்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனால் மக்கள் அவ்வழியே செல்ல அஞ்சுகின்றனர். பெரியகுமட்டி கிராம மக்கள் பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு நேரடியாக சென்று புகார் தெரிவித்தும் தீயணைப்பு படையினர் விஷ வண்டுகளை அழிக்க வரவில்லை என குற்றச் சாட்டை எழுப்பியுள்ளனர். பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க கடலூர் தீயணைப்பு துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Source: Dinamalar
November 09, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- என்ன செய்தார் எம்.எல்.ஏ. செல்வி ராமஜெயம் ?
- மகனை வைத்து பின்லேடனைப் பிடிக்க புஷ் போட்ட திட்டம்!
- சவூதி: "சினிமா தேவை" என்கிறார் உயர் அதிகாரி
- இடைமறித்து எதிரி ஏவுகணைகளை தாக்கும் இந்தி ஏவுகணைச் சோதனை வெற்றி
- முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் படத்தை ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்த மாணவன் கைது
- விஷ வண்டுகளை அழிக்க பரங்கிப்பேட்டை தீயணைப்பு படையினர் தயக்கம்
- மோடியின் உண்ணாவிரதத்தில் போலீசார் தடியடி!
- உதவி தொகை வழங்கும் விழா
- விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் ரூ. 21 கோடி செலவில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி மும்முரம்
- எல்லா ஹிந்துக்களும் தீவிரவாதிகள் அல்ல – திக்விஜய் சிங்
No comments:
Post a Comment