கிள்ளை:பிச்சாவரத்தில் படகு சவாரி மூலம், தீபாவளியை முன்னிட்டு இந்த ஆண்டு கூடுதலாக 40 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.கிள்ளை அடுத்த பிச்சாவரத்தில் சுற்றுலாத் துறை மூலம் படகு சவாரிக்கு அனுமதிக்கப்பட்டு துடுப்பு படகுகளுடன், மோட்டார் படகுகள்
இயக்கப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கோடை மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்வதால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. தற்போது தீவாளியை முன்னிட்டு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறையாக இருந்ததால், நேற்று முன்தினம் சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனர். இதனால், கடந்த 5 மற்றும் 6ம் தேதிகளில் படகு சவாரி மூலம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 40 ஆயிரம் ரூபாய் கூடுதல் வருவாயாகும். நேற்று "ஜல்' புயல் காரணமாக படகு சவாரி நிறுத்தப்பட்டது.
Source: Dinamalar
November 09, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- K-Tic ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் & கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' / K-Tic Conducted 'Educational Awareness Camp & Exchanges of Thoughts

No comments:
Post a Comment