Islamic Widget

November 29, 2010

பரங்கிப்பேட்டையில் சிமெண்ட் சாலை பணிக்கு 84.60 லட்சம் ஒதுக்கீடு - ஆட்சியர் அறிக்கை

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சிகளில் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.10.32 கோடியில் சாலை பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் பேசினார்.


கடலூர் மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சிகளில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் 10 தார் சாலைகளும், 181 சிமெண்ட் சாலைகள் அமைப்பதற்கு 10.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அண்ணாமலை நகர் பேரூராட்சியில் தார் மற்றும் சிமெண்ட் சாலை பணிக்கு 50.60 லட்சம் ரூபாயும், காட்டுமன்னார்கோவிலில் சிமெண்ட் சாலை பணிக்கு 83.95 லட்சமும், பரங்கிப்பேட்டையில் சிமெண்ட் சாலை பணிக்கு 84.60 லட்சமும், வடலூரில் தார், சிமெண்ட் சாலை பணிகளுக்கு 77.05 லட்சமும், திட்டக்குடியில் சிமெண்ட் சாலை பணிக்கு 80.57 லட்சமும், குறிஞ்சிப்பாடியில் தார் மற்றும் சிமெண்ட் சாலை பணிக்கு79.25 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புவனகிரியில் தார், சிமெண்ட் சாலை பணிகளுக்கு 82.65 லட்சமும், கெங்கைகொண்டானில் சிமெண்ட் சாலை பணிக்கு 28.60 லட்சமும், பெண்ணாடத்தில் 83.10 லட்சத்தில் சிமெண்ட் சாலைகளுக்கும், ஸ்ரீமுஷ்ணத்தில் தார், சிமெண்ட் சாலை பணிகளுக்கு 63.50 லட்சமும், லால்பேட்டையில் சிமெண்ட் சாலை பணிகளுக்கு 62.30 லட்சமும், மங்கலம்பேட்டையில் சிமெண்ட் சாலை பணிகளுக்கு 46 லட்சமும், தொரப்பாடியில் சிமெண்ட் சாலை பணிகளுக்கு 45.28 லட்சமும், மேல்பட்டாம்பாக்கத்தில் தார், சிமெண்ட் சாலை பணிகளுக்கு 61.80 லட்சமும், கிள்ளையில் தார், சிமெண்ட் சாலை பணிகளுக்கு 59.55 லட்சமும், சேத்தியாதோப்பில் சிமெண்ட் சாலை பணிக்கு 43.75 லட்சம் என மொத்தம் 191 சாலை பணிகளுக்கு 10.32 கோடி ரூபாய் விரைவில் பணி ஆணை வழங்கப்படவுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் வரும் 31.3.2011ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என என கலெக்டர் பேசினார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source: Dinamalar - Photo: CWO

No comments:

Post a Comment