கடலூர் : வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய தூரல் மழை பெய்தது. தொழுதூரில் அதிகபட்சமாக 140 மி.மீ., மழை பெய்தது.
வங்கக்கடலில் சென்னைக்கு அருகே 400 கி.மீ., தொலைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டிருந்தது. இதனால் தமிழக கடலோரப்பகுதி மற்றும் உள் மாவட்டங்களில் நேற்று பல இடங்களில் மழை பெய்தது. கடலூரில் இரவு முழுவதும் லேசான தூரல் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு மி.மீ., விவரம்:
கடலூர் 8.5 மி.மீ., பண்ருட்டி 25, வானமாதேவி 12, அண்ணாமலைநகர் 6, பரங்கிப்பேட்டை 5, புவனகிரி 6, சேத்தியாத்தோப்பு 8, லால்பேட்டை 16, ஸ்ரீமுஷ்ணம் 35, சிதம்பரம் 3, காட்டுமன்னார்கோவில் 10, விருத்தாசலம் 30, தொழுதூர் 140 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக தொழுதூரில் 140 மி.மீ., மழை பெய்துள்ளது.
Source:dinamalar photos: pno.news
November 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- 8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு!
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இறப்புச் செய்தி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு

No comments:
Post a Comment