கடந்த செப்டம்பர் மாதம் வரை இந்தியா முழுவதும் புழக்கத்தில் இருந்து 1.78 கோடி போலி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக மத்திய வேளாண்துறை இணைச்சர் பேராசிரியர் கே.வி. தாமஸ் கூறியுள்ளதாவது:
பொது விநியோகத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை அகற்றி அதை செம்மைப்படுத்துவதற்கு 2006-ம் ஆண்டு 9 அம்ச செயல் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் முடிய 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் 1.78 கோடி தகுதியற்ற மற்றும் போலி ரேஷன் கார்டுகளை நீக்கியுள்ளன.
திட்டக் குழுவின் துணைத் தலைவர் தலைமையிலான உணவு மற்றும் பொது விநியோகம் குறித்த பணிக்குழுவானது சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை சிறந்த முறையில் வழங்குவதற்கான பரிந்துரைகளை வழங்கவுள்ளது. இந்தக் குழுவானது வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பயனாளிகளின் எண்ணிக்கையை இறுதி செய்தல், சேமிப்பு வசதிகளை அதிகப்படுத்துதல், பொது விநியோகத் திட்டத்தை கணினிமயமாக்குதல் உள்ளிட்ட அம்சங்களை ஆராயவுள்ளது.
November 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- தமிழக சட்ட மேலவை தேர்தல்: ஆலிம்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
- குவைத்தில் புனித அரஃபா நாள் சிறப்பு நிகழ்ச்சி
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு ஏற்பாடு செய்த வரலாற்றுச் சுற்றுலா / Kuwait Tamil Islamic Committee (K-Tic) arranged "Trip to Failaka"
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- குவைத்தில் K-Tic ஏற்பாடு செய்த 6ம் ஆண்டு மாபெரும் "ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு"!

No comments:
Post a Comment