காட்டுமன்னார்கோவில் : சிதம்பரம் அருகே பழைய கொள்ளிட உப்பனாற்று வடிகாலை கடந்து சென்றவர், முதலை கடித்து இறந்தார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே நந்திமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (48). சிதம்பரத்தில் மளிகைக் கடையில் வேலை பார்த்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவு, ஊருக்குச் செல்லும் பஸ்சை தவற விட்டதால் காட்டுமன்னார்கோவில் பஸ்சில் சென்று புதுப்பூலாமேடு வந்தார். பின்னர் இரவு 10.30 மணிக்கு நந்திமங்கலத்திற்கு பழைய கொள்ளிடம் உப்பனாறு வடிகால் வாய்க்கால் வழியாக வீட்டிற்குச் சென்றார். அப்போது ஆற்றில் இருந்த முதலை, இளங்கோவின் தலையை கவ்வி தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது. முதலையின் பிடியில் சிக்கிய இளங் கோவன் அலறல் சத்தம் கேட்டு கரையோர கிராமத்தினர் ஓடிச்சென்று அவரை மீட்க முயன்றனர். ஆனால், முதலை அவரை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது. தகவல் அறிந்த குமராட்சி சப் - இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆற்றில் இளங்கோவனை தேடினர். உடல் கிடைக்கவில்லை. இதற்கிடையே நேற்று காலை நந்திமங்கலம் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் கரை யோரம் இளங்கோவன் உடல் கிடந்தது. இளங்கோவன், முதலை கடித்து இறந்ததை அறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அத்திப்பட்டு கிராமத்திற்கு வந்து அவரது உடலைப் பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
source: dinamalar
October 04, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டைக்கு முட்லூர்-புதுச்சத்திரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்படுமா?
- பூக்கள் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ மல்லிகை விலை க்ஷீ800 ஆனது
- பரங்கிப்பேட்டை : நீர் உயிர் நச்சு கருத்தரங்கம்
- பரங்கிப்பேட்டையில் வத்தக்கரை எரிந்து சாம்பல்லனாது
- கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும்: குரேஷி!
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
- 11-வது வார்டு உறுப்பினர் இபாயின் வெற்றி!
No comments:
Post a Comment