பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் அக்டோபர் 1-ந்தேதி முதல் 2 மணி நேர மின்சார நிறுத்த நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக செயற் பொறியாளர் செல்வ சேகர் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் மின்வாரிய செயற்பொறியாளர் செல்வ சேகர் விடுத்துள்ள செய்தி குறிப்பு:
சிதம்பரம் கோட்டத்துக்கு உட்பட்ட துணை மின்நிலையங்களில் 1ம் தேதி முதல் மின் நிறுத்தம் செய்யப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட சிதம்பரம் நடராஜா பீடர் மூலம் மின் சப்ளை பெறும் மேலவீதி, கீழவீதி, வடக்கு வீதி, பதினாறு கால் மண்டப தெரு, கமலீஸ்வரன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் 10 மணிவரையிலும், அண்ணாமலைநகர், மாரியப்பா நகர் பகுதிகளில் மதியம் 12 மணிமுதல் 2 மணி வரையிலும், அம்மாபேட்டை, மணலூர், ஆகிய பகுதிகளிலும் மதியம் 2 மணிமுதல் 4 மணி வரையிலும், டூரிசம் பீடர் மூலம் மின் சப்ளை பெறும் பஸ் நிலையம், எஸ்.பி.கோயில் தெரு, சபாநாயகர் தெரு, தெற்கு வீதி ஆகிய பகுதிகளில் மாலை 4 மணிமுதல் 6 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும்.
காட்டுமன்னார்கோவில் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறப்படும் காட்டுமன்னார்கோவில், லால் பேட்டை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 8 மணி முதல் 10 மணிவரையிலும், பு.முட்லூர் துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறப்படும் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறப்படும் பகுதிகளும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணிமுதல் 12 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Source: Dinakaran
October 04, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- புதுப்பள்ளி
- நஷ்டவாளர்கள் யார்?
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- ஜூன் 4-ல் பஸ் நிறுத்த போராட்டம்: போக்குவரத்து தொழிலாளர் சங்கம் தீர்மானம்
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment