கடலூர் : மிளகாய் பொடி தூவி மோட்டார் பைக்கில் சென்ற தம்பதியரிடம் செயின் பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் முதுநகர் அடுத்த மணக்குப்பத்தைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (36). இவரது மனைவி கிருபாளினி. இருவரும் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மோட்டார் பைக் கில் பெரிய பிள்ளையார் மேடு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று வீடு திரும்பினர்.
மணக்குப்பம் ரயில்வே கேட் அருகே வந்த போது பின்னால் மோட்டார் பைக்கில் வேகமாக இரு மர்ம ஆசாமிகள் விநாயகமூர்த்தியின் மோட்டார் பைக்கை உரசியபடி சென்று அவர் மீது மிளகாய் பொடி தூவினர். பின்னர் பைக்கை எட்டி உதைத்து இருவரையும் கீழே தள்ளி கிருபாளிணி கழுத்தில் இருந்த நான்கு சவரன் செயினை அறுத்துச் சென்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக் குப் பதிந்து நகையை பறித் துச் சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
Source: Dinamalar
No comments:
Post a Comment