கடலூர் : மிளகாய் பொடி தூவி மோட்டார் பைக்கில் சென்ற தம்பதியரிடம் செயின் பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் முதுநகர் அடுத்த மணக்குப்பத்தைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (36). இவரது மனைவி கிருபாளினி. இருவரும் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மோட்டார் பைக் கில் பெரிய பிள்ளையார் மேடு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று வீடு திரும்பினர்.
மணக்குப்பம் ரயில்வே கேட் அருகே வந்த போது பின்னால் மோட்டார் பைக்கில் வேகமாக இரு மர்ம ஆசாமிகள் விநாயகமூர்த்தியின் மோட்டார் பைக்கை உரசியபடி சென்று அவர் மீது மிளகாய் பொடி தூவினர். பின்னர் பைக்கை எட்டி உதைத்து இருவரையும் கீழே தள்ளி கிருபாளிணி கழுத்தில் இருந்த நான்கு சவரன் செயினை அறுத்துச் சென்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக் குப் பதிந்து நகையை பறித் துச் சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
Source: Dinamalar
October 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- நஷ்டவாளர்கள் யார்?
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
No comments:
Post a Comment