கடலூர் : மிளகாய் பொடி தூவி மோட்டார் பைக்கில் சென்ற தம்பதியரிடம் செயின் பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் முதுநகர் அடுத்த மணக்குப்பத்தைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (36). இவரது மனைவி கிருபாளினி. இருவரும் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மோட்டார் பைக் கில் பெரிய பிள்ளையார் மேடு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று வீடு திரும்பினர்.
மணக்குப்பம் ரயில்வே கேட் அருகே வந்த போது பின்னால் மோட்டார் பைக்கில் வேகமாக இரு மர்ம ஆசாமிகள் விநாயகமூர்த்தியின் மோட்டார் பைக்கை உரசியபடி சென்று அவர் மீது மிளகாய் பொடி தூவினர். பின்னர் பைக்கை எட்டி உதைத்து இருவரையும் கீழே தள்ளி கிருபாளிணி கழுத்தில் இருந்த நான்கு சவரன் செயினை அறுத்துச் சென்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக் குப் பதிந்து நகையை பறித் துச் சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
Source: Dinamalar
October 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment