கடலூர்: தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக குடோன்களில் சலுகை விலையில் சிமென்ட் விற் பனை துவங்கியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட் டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு உத்தரவின் பேரில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் சார்பில் சிமென்ட் மூட்டை 200 ரூபாய்க்கு சலுகை விலையில் விற் பனை செய்யப்பட்டு வருகிறது.
புதிதாக 1,000 சதுர அடி வரை வீடு கட்டுபவர்கள் சலுகை விலையில் சிமென்ட பெற்றிட உரிய வரைவு காசோலை மற் றும் ரேஷன் கார்டு நகலை விண்ணப்பத்துடன் இணைத்து அருகில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கழக குடோன்களில் கொடுத்து 8 தவணைகளில் சிமென்ட் மூட்டைகள் பெற்றுக் கொள்ளலாம். வீடுகள் பழுது பார்க்க மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு 50 மூட்டை சிமென் டுகளை நேரடியாக பணம் செலுத்தி பெறலாம். இதுகுறித்து மேலும் விவரம் வேண்டுவோர் கடலூர் (04142-233301), குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி (04142-253796), விருத்தாசலம் (04143-238382), சிதம்பரம் (04144-230802), காட்டுமன்னார்கோவில் (04144-262013), திட்டக்குடி (04143-255214) ஆகிய தொலைபேசிகளிலோ அல்லது கடலூரில் உள்ள மண்டல மேலாளரை (04142-221621, 221622, 221623) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Source: Dinamalar
October 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- பரங்கிப்பேட்டையில் தீ விபத்து நிவாரண உதவி!
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
- பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்து வாரம் முழுவதும் தூர்ந்து நாள்தோறும் ரூ.50 லட்சம் இழப்பு!
- புயல் நிவாரணம்: விண்ணப்பிக்க புகார் மையம்
- சிதம்பரம் சாலையில் பஸ்-லாரி மோதல்: 12 பேர் காயம்
- பிரணாப் முகர்ஜியின் வெற்றி வாய்ப்பை தடுக்கும் ஒரே நபர் அப்துல் கலாம்தான் !
No comments:
Post a Comment