சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், இன்ஜினியரிங் படித்த ஜார்க்கண்ட் மாணவி, விடுதி அறையில் தூக்கு போட்டு இறந்து கிடந்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இன்ஜினியரிங் கல்லூரியில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நவுசத் அலி மகள் நூர்நிகார்(20) மூன்றாம் ஆண்டு கம்ப்யூட்டர் பிரிவில்
படித்துவந்தார். பல்கலைக்கழக வளாக விடுதியில் எண்.203 அறையில் நான்கு மாணவியருடன் தங்கியிருந்தார். நேற்று காலை சக மாணவியர் வகுப்புக்குச் சென்றனர். உடல் நிலை சரியில்லை எனக் கூறி மாணவி நூர்நிகார் வகுப்புக்குச் செல்லாமல் சோர்வாக அமர்ந்திருந்தார். இந்நிலையில், வகுப்புக்குச் சென்ற மாணவி ஒருவர் அறைக்கு திரும்பி வந்த போது கதவு பூட்டப்பட்டிருந்தது. தட்டிப் பார்த்தும் திறக்காததால் வார்டனிடம் தகவல் தெரிவித்தார். கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, மின் விசிறி கொக்கியில் துப்பட்டாவால் நூர்நிகார் தூக்கு போட்டு இறந்து கிடந்தார். அவரது கால் பகுதியில், "சாரி' என்றும், கடிதம் ஒன்றில், "அப்பா, அம்மாவுக்கு சாரி' என்றும் எழுதி வைத்திருந்தார். கல்லூரியில் நேற்று முன்தினம் தேர்வுக்கான ரிசல்ட் ஒட்டியுள்ளனர். நூர்நிகார் இரண்டு பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்றதாக தெரிகிறது. இந்த வேதனையில் மாணவி நூர்நிகார் தூக்கு போட்டு இறந்திருக்கலாம் என, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்த அண்ணாமலைநகர் போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்
Source: Dinamalar
September 01, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் – இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ஸா !
- இறப்புச் செய்தி
- புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு !
- பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய பள்ளி ஆசிரியர் கைது!
- லைலத்துல் கத்ரின் சிறப்பு
- உதைபந்தாட்ட மோதல் 74 பேர் பரிதாப மரணம் 1000 பேர் காயம்..
- கடும் அவதியில் மக்கள் – நிவாரணக்காட்சிகள்
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- பக்கீம்ஜாத் குளம் தூர் மற்றும் பசுமைபடுத்த ஆலோசனை கூட்டம்
- பரங்கிப்பேட்டை: கிராவல் லாரிகள் தடை கோரி பொதுமக்கள் சாலை மறியல்
No comments:
Post a Comment