சிதம்பரம், ஆக. 31: சிதம்பரத்தில் தொலைந்து போன ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.74 ஆயிரம் பணத்தை எடுத்த மர்ம ஆசாமிகளை போலீஸôர் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
சிதம்பரம் எஸ்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் ஜெயபாலன் (72). ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரியான இவரது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம் கார்டு தொலைந்து போனது. இந்த கார்டினல் ரகசிய குறியீட்டு நம்பரை எழுதி வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் திங்கள்கிழமை வங்கிக்கு சென்று தனது கணக்கு குறித்து மாதாந்திர பட்டியலை பெற்ற போது கடந்த 13-ம் தேதி முதல் குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு வங்கியின் ஏடிஎம் மையத்திலிருந்து 9 முறை ரூ.74 ஆயிரம் ரொக்கம் எடுக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார்.
பின்னர் இதுகுறித்து ஜெயபாலன் சிதம்பரம் நகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸôர் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
September 01, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- நஷ்டவாளர்கள் யார்?
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- புதிதாக கட்டப்படும் வாத்தியாப்பள்ளி
- பரங்கிப்பேட்டையில் வாலிபால் போட்டி!

No comments:
Post a Comment