அலகாபாத்: அயோத்தி வழக்கில் 30ந் தேதி தீர்ப்பு கூறுகிறது அலகாபாத் நீதிமன்றம். அயோத்தி தீர்ப்பிற்கு தடை கோரும் மனுவை தடை செய்தது உச்சநீதிமன்றம். அயோத்தி வழக்கில் 24ந் தேதி தீர்ப்பு கூறவிருந்தது அலகாபாத் நீதிமன்றம். திரிபாதியின் பொதுநல மனுவை ஏற்று விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது-.
அயோத்தி பிரச்னை:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.5 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதே வழக்கு. 60 ஆண்டாக நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பை அறிய நாடு முழுவதும் ஆர்வம் காணப்படுகிறது. ராமர் பிறந்த இடம் என்பதால் தங்களுக்கு சொந்தம் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். பாபர் மசூதி இருந்ததால் தங்களுக்கு சொந்தம் என்று மற்றொரு பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர். சர்ச்சைக்குரிய நிலம் குறித்து நடைபெற்ற பல கட்ட பேச்சுத் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கருத்து:
அயோத்தி வழக்கிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் வரவேற்பளித்துள்ளது. இதனையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பிற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தடை நீக்கப்பட்டதற்கு பாரதீய ஜனதா கட்சியும் ஆதரவு அளித்துள்ளது.
September 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
- தினம் ஒரு குர்ஆன் வசனம்

No comments:
Post a Comment