கடலூர் : பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் 1,389 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நாளை (24ம் தேதி) தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி எனது தலைமையில் ஒரு ஏ.டி.எஸ்.பி., 7 டி.எஸ்.பி.,க்கள், 30 இன்ஸ்பெக்டர்கள், 100 சப் இன்ஸ்பெக்டர்கள், 300 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், 800 போலீசார், 150 ஆயுதப்படை போலீசார் என 1,389 பேர் பாதுகாப்புப் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
வழிபாட்டுத் தலங்கள், பஸ் ஸ்டாண்ட், பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய சாலைகள், என 80 இடங்கள் அடையாளம் காணப் பட்டு அதிக கவனம் செலுத்தப்படும். 20 வாகனங்கள் மூலம் நெடுஞ்சாலைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். 10 சிறப்பு அதிரடிப்படை வாகனங்கள் இயக்கப்படுவதுடன் 27 இடங்களில் செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், ரயில் பாதைகளில் கூடுதல் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். வெடிகுண்டு கண்டுபிடிப்பு, செயலிழப்பு பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
Source: Dinamalar
September 23, 2010
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: கடலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 1,389 போலீசார்
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- நஷ்டவாளர்கள் யார்?
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- புதிதாக கட்டப்படும் வாத்தியாப்பள்ளி
- ஹஜ் பயணிகளின் பயணம் திடீர் ரத்து : பயணிகளும்,பொதுமக்களும் அதிர்ச்சி

No comments:
Post a Comment