பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசும், டீசல் விலை லிட்டருக்கு 9 காசும் உயர்ந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப, அவ்வப்போது பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த நிலையில் பெட்ரோல் பம்ப் டீலர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது.
இதைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு நேற்று சிறிது உயர்த்தியது.
அதன்படி, நாடு முழுவதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 முதல் 12 காசு வரையும், டீசல் விலை லிட்டருக்கு 9 முதல் 10 காசு வரையும் உயர்த்தப்பட்டது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசு உயர்ந்தது. இதைத்தொடர்ந்து, சென்னையில் 55 ரூபாய் 92 காசாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 56 ரூபாய் 2 காசாக உயர்ந்தது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 9 காசு உயர்ந்தது. இதனால், 40 ரூபாய் 7 காசாக இருந்த ஒரு லிட்டர் டீசலின் விலை, 40 ரூபாய் 16 காசாக அதிகரித்தது.
டெல்லியில் பெட்ரோல் விலை 11 காசு உயர்ந்து லிட்டருக்கு 51 ரூபாய் 56 காசு ஆனது. இதேபோல் டீசல் விலை 9 காசு உயர்ந்து லிட்டருக்கு 37 ரூபாய் 71 காசு ஆனது.
இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
Source: Daily Thanthi
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- 8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு!
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இறப்புச் செய்தி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு
No comments:
Post a Comment