பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசும், டீசல் விலை லிட்டருக்கு 9 காசும் உயர்ந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப, அவ்வப்போது பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த நிலையில் பெட்ரோல் பம்ப் டீலர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது.
இதைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு நேற்று சிறிது உயர்த்தியது.
அதன்படி, நாடு முழுவதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 முதல் 12 காசு வரையும், டீசல் விலை லிட்டருக்கு 9 முதல் 10 காசு வரையும் உயர்த்தப்பட்டது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசு உயர்ந்தது. இதைத்தொடர்ந்து, சென்னையில் 55 ரூபாய் 92 காசாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 56 ரூபாய் 2 காசாக உயர்ந்தது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 9 காசு உயர்ந்தது. இதனால், 40 ரூபாய் 7 காசாக இருந்த ஒரு லிட்டர் டீசலின் விலை, 40 ரூபாய் 16 காசாக அதிகரித்தது.
டெல்லியில் பெட்ரோல் விலை 11 காசு உயர்ந்து லிட்டருக்கு 51 ரூபாய் 56 காசு ஆனது. இதேபோல் டீசல் விலை 9 காசு உயர்ந்து லிட்டருக்கு 37 ரூபாய் 71 காசு ஆனது.
இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
Source: Daily Thanthi
Subscribe to:
Post Comments (Atom)
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- கதையல்ல நிஜம் - தாயினாலேயே நிர்வாணப்படுத்தபட்ட மகள்
- 4 நிமிடத்தில் நடத்திய கைவரிசை ஏடிஎம் மெஷினை திறந்து ஸி21 லட்சம் கொள்ளை
- பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டைக்கு முட்லூர்-புதுச்சத்திரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்படுமா?
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- பூக்கள் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ மல்லிகை விலை க்ஷீ800 ஆனது
- பரங்கிப்பேட்டை : நீர் உயிர் நச்சு கருத்தரங்கம்
- துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!
- கடலூர் எல்லைகளில் "செக்போஸ்ட்' துணை ராணுவம் தீவிர சோதனை
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
No comments:
Post a Comment